கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவி

ஆத்தூர் புனித ஜெயராக்கினி ஆலய பங்கு மக்கள் சார்பாக கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை

ஆத்தூர் புனித ஜெயராக்கினி ஆலய பங்கு மக்கள் சார்பாக கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.
அரிசி, பிஸ்கட், மளிகை பொருள்கள், மருந்துகள்,புதிய ஆடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை  பங்குத்தந்தை கிரகோரி ராஜன் மற்றும் அன்பிய பொறுப்பாளர்கள் வழங்கினர். 
இதே போல் ஆத்தூர் இளைஞரணி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பும், சரக்குந்துகளில் வீதிகள் தோறும் சென்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட கேட்டுக் கொண்டதின் பேரில் நிவாரணப் பொருள்கள் பெற்று வருகின்றனர்.இதனை கேரள மாநிலத்துக்கு அனுப்ப தயாராகி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com