கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி கடம்பூர் ராமநாதபுரம் அரசுப் பள்ளியில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் என்.டி.செல்வம் உ.வே.சா.வின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டை எடுத்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் பயிற்றுநர் சுப்பிரமணியன், ஆசிரியை தனம், பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா, மாணவ, மாணவியர் அனைவரும் உ.வே.சா.வின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.