ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த கற்பூர விற்பனையாளர் டி.நாகேந்திரன் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
கொடுமுடி மலையம்மன் தெருவைச் சேர்ந்தவர் டி.நாகேந்திரன் (40). இவரது மனைவி காந்தலட்சுமி. இத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் டி.நாகேந்திரன் வெள்ளிக்கிழமை காலமானார். இவரது சகோதரர் டி.பிரபு குப்தா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் தருமபுரி பதிப்பில் சேலம் அலுவலகத்தில் முதுநிலை வர்த்தக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை கொடுமுடியில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளன. தொடர்புக்கு: 9842799221.