இளம்பிள்ளை அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
இளம்பிள்ளை அருகேயுள்ள நடுவனேரி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அர்ச்சுனன் (68). இவர் வெள்ளிக்கிழமை இரவு, தனது குடிசை வீட்டில் படுத்திருந்த போது புகை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் அர்ச்சுனன் தீயில் கருகி உயிரிழந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.