கிராம உதவியாளர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு

சங்ககிரி வட்டத்தில் உள்ள கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்களாக பணியாற்றி வந்த 7 பேர் அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்று வட்டாட்சியர் அலுவலகத்தில்

சங்ககிரி வட்டத்தில் உள்ள கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்களாக பணியாற்றி வந்த 7 பேர் அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை பணியில் சேர்ந்தனர்.
 சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட கண்டர்குலமாணிக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளராக பணியாற்றி வந்த மாரியப்பன், கூடலூர் அன்னக்கொடி, ஏகாபுரம் முத்துசாமி, கன்னந்தேரி செல்வன், இடங்கணசாலை பிட்-1 சித்தையன், அன்னதானப்பட்டி செல்லன் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளராக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, 7 பேரும் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணி
 வழங்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com