எலந்தவாரியில் ஏரி அமைப்பதற்கான இடத்தை ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் சிறுவாச்சூர் ஊராட்சியை அடுத்துள்ள எலந்தவாரி மலைக் கிராமத்தில் ஏரி அமைக்க 60 ஏக்கர் நிலம் தயார் செய்தனர். இங்கு ஏரி அமைத்தால் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவர். இதையடுத்து, மலையில் இருந்து வரும் நீரை சேமித்து வைக்க ஏதுவான இந்த ஏரியை தமிழக அரசு ஆய்வு செய்தது.
இதில், ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வன், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன், கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் அ.மருதமுத்து, தலைவாசல் வடக்கு ஒன்றியச் செயலர் க.இராமசாமி, வருவாய் அலுவலர் யசோதா மற்றும் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.