சேலம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது
.
இதில் மாவட்டத் தலைவர் கே.ஆர்.செந்தில்வடிவேல் தலைமை தாங்கினார். மருந்து மொத்த வணிகர்கள் சங்கத் தலைவர் ஆர்.முருகேசன், மாவட்டச் செயலர் எம்.கந்தசாமி, பொருளாளர் எஸ்.பழனிசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பி.திருவாசகம் ஆகியோர் பங்கேற்றனர்.
சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், தாரை குழுமத்தின் தலைவருமான தாரை அ.குமரவேலு பேசுகையில், உலகில் வளர்ந்த நாடுகளில் 3 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை சரக்கு சேவை வரிகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 3 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுதான் மத்திய, மாநில அரசு என இரட்டை வரி விதிப்பு முறை உள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12 சதவீத வரி உள்ளது. அதேபோல ஆயுர்வேத மருந்துகளுக்கும் 12 சதவீத வரி உள்ளது. எனவே, உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.
அறக்கட்டளைத் தலைவர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார். இதில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.