மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் அனைத்து வருவாய்க் கோட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் அனைத்து வருவாய்க் கோட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் அனைத்து வருவாய்க் கோட்டங்களிலும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை (மே 16) காலை 10 மணி முதல் சேலம் வருவாய் கோட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்திலும், மே 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆத்தூர் வருவாய் கோட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மே 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் சங்ககிரி வருவாய் கோட்டம், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மே 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் மேட்டூர் வருவாய் கோட்டம், ஓமலூர் தாலுகா அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களை கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 
எனவே, தங்கள் பகுதியில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய கோரிக்கை மனுவுடன் அடையாள அட்டை  நகலை இணைத்து நேரில் விண்ணப்பித்து கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com