வீடுகளின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
சேலம் ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். ஓய்வு பெற்ற எல்ஐசி அதிகாரியான இவர், மே 10-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இதனிடையே, கடந்த 12-ஆம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 2 கிலோ வெள்ளி, ரூ.26 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது. அதேபோல அருகில் உள்ள பாஷா ஜாவித் என்பவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது.
இதேபோல மரவனேரி ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவியுடன் வெளியே சென்றிருந்த சமயத்தில், வீட்டுக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com