கூடமலை ஜல்லிக்கட்டு: அரசிதழில் வெளியானது

கெங்கவல்லி அருகே கூடமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா, அரசிதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கெங்கவல்லி அருகே கூடமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா, அரசிதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
கூடமலையில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்திட விழாக் குழுத் தலைவர் முத்துலிங்கம், கெங்கவல்லி ஒன்றிய அதிமுக செயலர் கூடமலை ராஜா ஆகியோர் தலைமையில் விழாக் குழுவினர், ஜல்லிக்கட்டு விழாவை அரசிதழில் பதிவேற்றும் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கூடமலை ஜல்லிக்கட்டு விழா புதன்கிழமை அரசிதழில் வெளியானது. இதனைத் தொடர்ந்து கூடமலை மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
வருகிற 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில், தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன் முன்னிலையில் ஐல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வரும் நிலையில் , அரசுத் துறை அதிகாரிகள் விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com