மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்கள் மூலம் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இக்கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய கோரிக்கை மனுவுடன் அடையாள அட்டை நகலை இணைத்து நேரில் விண்ணப்பித்து கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார் என வட்டாட்சியர் கே.அருள்குமார்
தெரிவித்துள்ளார்.