மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது.
வியாழக்கிழமை காலை மேட்டூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவியது. மாலையில் வனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மேட்டூர், தங்கமாபுரிபட்டிணம், புதுச்சாம்பள்ளி, ராமன்நகர், குஞ்சாண்டியூர் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரைமணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் மின் விநியோகம் நடைபெற்றது. சுமார் 30 நிமிடம் நீடித்த மழையின் காரணமாக பகலில் நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.