கெங்கவல்லி அருகே வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்தது.
இப் பள்ளியில் 1,150-க்கு மேல் 12 பேரும், 1,100-க்கு மேல் 66 பேரும், 1,000-க்கு மேல் 220 பேரும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். பத்தாம் வகுப்பில் 480-க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பள்ளி அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கும், ராகவேந்திரா பள்ளியில் கல்விக் கட்டண சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும், சாதனைக்காக உழைத்த ஆசிரிய, ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் அருள்குமார், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராஜா, கல்வி ஆலோசகர்கள் லஷ்மிநாராயணன், இளையப்பன், என்ஆர் பழனிவேல், வெங்கடேசன், பள்ளியின் இயக்குநர்கள் பாராட்டுத் தெரிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினர்.