எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மேட்டூர் ஜிவி மேல்நிலைப் பள்ளி சாதனை

எஸ்.எஸ்.எல். சி. பொதுத்தேர்வில் மேட்டூர் மாசிலாபாளையத்தில் உள்ள ஜிவி மேல்நிலைப் பள்ளி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.

எஸ்.எஸ்.எல். சி. பொதுத்தேர்வில் மேட்டூர் மாசிலாபாளையத்தில் உள்ள ஜிவி மேல்நிலைப் பள்ளி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் இருவர் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒருவர் 489-ம், மற்றொரு மாணவர் 485 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இப்பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் இருவர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் இருவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் ஒருவரும், அறிவியலில் 5 பேரும் 99 மதிப்பெண்கள் பெற்றனர். இப்பள்ளி மாணவ-மாணவியர் 9 பேர் 475-க்கு மேலும், 32 பேர் 450-க்கு மேலும், 79 பேர் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com