பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

மேச்சேரி அருகே வனப் பகுதிக்கு சென்ற அத்தையை கொடுவாளால் வெட்டியவரை போலீஸார் தேடி

மேச்சேரி அருகே வனப் பகுதிக்கு சென்ற அத்தையை கொடுவாளால் வெட்டியவரை போலீஸார் தேடி
வருகின்றனர்.
மேச்சேரி அருகே உள்ள கீரைக்காரனூரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (51). கீரைக்காரனூரில் டீ கடை நடத்தி வருகிறார். திங்கள்கிழமை பிற்பகலில் கீரைக்காரனூரில் உள்ள வனப் பகுதிக்கு காய்ந்த விறகு பொறுக்கச் சென்றாராம். அப்போது இவரது உறவினர் விஜயகுமாரின் மகன் மணிகண்டன் (23) என்பவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். நடு வனப் பகுதிக்கு சென்றவுடன் சரஸ்வதியிடம் மணிகண்டன் தகாத முறையில் நடக்க முயன்றார். சரஸ்வதி சப்தமிடவே அவரை கொடுவாளால் வெட்டிய மணிகண்டன், அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அப்பகுதிக்கு வந்த கிராம மக்கள் சரஸ்வதியை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ஜெயசீலன் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com