ஸ்டாலின் கைதைக் கண்டித்து மறியல்: திமுகவினர் 130 பேர் கைது

சென்னையில் தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் மறியலில் ஈடுபட்ட 130 பேரை போலீஸார் கைது

சென்னையில் தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் மறியலில் ஈடுபட்ட 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த சேலம் திமுகவினர் எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவர் கலையமுதன், நிர்வாகிகள் சுபாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வாழப்பாடியில்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, வாழப்பாடியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தையும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் வாழப்பாடியில் ஒன்றிய செயலாளர் எஸ்.சி. சக்கரவர்த்தி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகர செயலாளர்கள் வாழப்பாடி செல்வம், பேளூர் ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முனுசாமி, அத்தனுôர்பட்டி ராஜா, ராஜாராம், ரவிமணி, அணையரசு, ஆனந்தன், சேலம் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வாழப்பாடியை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
சங்ககிரியில்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே சேலம் மேற்கு மாவட்ட திமுகவினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 19 பெண்கள் உள்பட 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயலர் (பொறுப்பு) எஸ்.கே.குப்புசாமி, மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் வி.என்.ராஜா, நிர்வாகி அய்யப்பன் உள்ளிட்ட 19 பெண்கள், 24 ஆண்கள் உள்பட 43 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com