மின்னல் பாய்ந்ததில் மாரியம்மன் கோயில் கோபுரம் சேதம்

சங்ககிரி வட்டம், இருகாலூர் புதுப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் மாரியம்மன் கோயில் கோபுரம்

சங்ககிரி வட்டம், இருகாலூர் புதுப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் மாரியம்மன் கோயில் கோபுரம் சேதமடைந்தது.
இருகாலூர் புதுப்பாளையம் கிராமத்திற்குட்பட்ட மயில்புறாகாடு பகுதியில் உள்ள வெள்ளிக்கிழமை பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் அருள்மிகு மாரியம்மன் கோயில் கோபுரத்தின் மீது பாய்ந்தது. அதில் கோபுரத்தின் சிலைகள் மற்றும் கோபுரத்தின் மேற்புற பகுதியில் இரண்டு அடி நீளத்திற்கு ஓட்டை விழுந்தது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இக் கோயிலின் கோபுரம் புதிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது.
நான்கு மாதத்திற்குள் மின்னல் பாய்ந்ததில் கோபுரம் சேதமடைந்தது குறித்து பக்தர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரி வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com