வாழப்பாடி பகுதி கிராமங்களில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் முகாமிட்டு, பாரம்பரிய இன கருங்கோழி, கினிகோழி, வான்கோழி மற்றும் வாத்துக் குஞ்சுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தையொட்டியுள்ள ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் நவீன முறையில் அடைக்காக்கும் பெட்டிகளில் பாரம்பரிய இன கருங்கோழி, கினிகோழி, வான்கோழி மற்றும் வாத்துக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றைக் கொள்முதல் செய்து கொண்டு வரும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறு வியாபாரிகள், வாழப்பாடி பகுதியில் முகாமிட்டு கிராமங்கள்தோறும் சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு ஜோடி பாரம்பரிய இன கோழிக் குஞ்சுகள் ரூ. 200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.