நத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உஷாபிரியன் சூரியநாத் தெரிவித்திருப்பதாவது: நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, வத்திபட்டி,சேத்தூர், அரவங்குறிச்சி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.