முன்விரோதம்: திண்டுக்கல் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கரூரில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூரில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூரைச் சேர்ந்தவர் தங்கதுரை(34). இவர் வியாழக்கிழமை கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குச் செல்ல கரூர் பேருந்துநிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது பின்னால் சென்ற மர்ம நபர்கள்  அவரை சராமரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் ஆட்கள் திரண்டதும் மர்ம நபர்கள் காரில் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கரூர் நகர கா வல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய தங்கதுரையை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதா என விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com