பழனியில்புதன்கிழமை கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
பழனி திருநகரை சேர்ந்த தொழிலாளர்கள் முருகப்பெருமாள்(48), பழனிச்சாமி ஆகிய இருவரும் பழனி மதினா நகரில் உள்ள அன்சாரி என்பவர் வீட்டில் புதன்கிழமை கட்டடப் பணிக்காக சாரம் கட்டியுள்ளனர். அப்போது சாரம் சரிந்ததில் இருவரும் படுகாயமடைந்து, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட முருகப்பெருமாள் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.