தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உரிமை மீட்புக் குழு கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை சம்பத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் முடிவினை, தமிழக அரசு கைவிடக் கோரி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.