ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
கள்ளிமந்தையம் அப்பனூத்து அருகே உள்ள ஆத்திகாட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி நாச்சிமுத்து (60).
இவர், தனது இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலை அம்மன் கோயில் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, ஏர்வாடியிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.