கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயின்ட், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பயணிகள் ஏராளமானோர் காணப்பட்டனர்.
இவர்கள், மாலை நேரங்களில் நிலவும் பனியையும் பொருட்படுத்தாது ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால், வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.