பழனியை அடுத்த தாமரைக்குளம் ஊராட்சியில் நடைபெறாத கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறி கையெழுத்து பெறப்பட்டதை கண்டித்து சனிக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பழனியை அடுத்தது தாமரைக்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்துள்ளனர். இந்நிலையில் ஊராட்சி அலுவலகத்தில் செயலராக பணியாற்றி வருபவர் நூறுநாள் வேலை செய்பவர்களிடம் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதாக கடிதம் தயார் செய்து அதில் கையெழுத்து பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் சனிக்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி செயலர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியேறினார்.