கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மஞ்சம்பட்டி, மூங்கில் பள்ளம் ஆகியப் பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினர்களுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் சார்- ஆட்சியர் வினித் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பழங்குடியினருக்குத் தேவையான குடும்ப அட்டை, அரசின் நலத்திட்ட உதவிகள், உதவித் தொகை, சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி, வில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மன்னவனூர் ஊராட்சி எழுத்தர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.