வத்தலகுண்டுவில் சுழற்சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

வத்தலகுண்டுவில் சுழற்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வத்தலகுண்டுவில் சுழற்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு சங்க மாவட்ட ஆளுநர் பி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். விழாவில் மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் (2018-19), ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சுகுமார், துணை ஆளுனர் கே.எம்.நஜுமுதீன், முன்னாள் நிர்வாகிகள் பத்ரிநாராயணன், பரமேஸ்வரன், ராஜயோகியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலகுண்டு புதிய தலைமுறை சுழற்சங்க 2017-18 ஆம் ஆண்டின் தலைவராக என்.முருகேசபாண்டியன், செயலராக எம்.சதீஸ்குமார், பொருளாளராக பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com