வத்தலகுண்டுவில் சுழற்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்க மாவட்ட ஆளுநர் பி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். விழாவில் மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் (2018-19), ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சுகுமார், துணை ஆளுனர் கே.எம்.நஜுமுதீன், முன்னாள் நிர்வாகிகள் பத்ரிநாராயணன், பரமேஸ்வரன், ராஜயோகியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலகுண்டு புதிய தலைமுறை சுழற்சங்க 2017-18 ஆம் ஆண்டின் தலைவராக என்.முருகேசபாண்டியன், செயலராக எம்.சதீஸ்குமார், பொருளாளராக பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.