திமுக பின்வாசல் வழியாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறது: பழ. நெடுமாறன்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
 பழனி அக்க்ஷயா பள்ளியில் திங்கள்கிழமை நெய்க்காரபட்டி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பட்டயத் தலைவர் 75-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்,நெய்க்காரபட்டி அரிமா அறக்கட்டளைத் தலைவர் துளசிதரன் தலைமை வகித்தார். பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் கூறியது:
 சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய திமுக மக்கள் பிரச்னைகளை எழுப்பி ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதை விடுத்து ஆளுநரை சந்தித்து மீண்டும் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வருவது ஏற்புடையதல்ல. இப்போது நடைபெறுவது பட்ஜெட் கூட்டம். வரவு, செலவு கூட்டம். மானியக்கோரிக்கை வரிசையாக பேசப்படும்.  பலமான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்தி அதில் ஆளும் கட்சியைத் தோல்வியடைய செய்ய வேண்டும். அதை விடுத்து ஆளுநரை சந்திப்பது கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் செயலாகும். இது ஜனநாயக விரோத செயலாகும் என்றார்.  
நதிநீர் இணைப்புக்கள் மொழிவாரி மாநிலங்கள் பெயரால் தடைபட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் அரிமா சங்க பட்டயத் தலைவராக மயில்சாமி, தலைவராக மகுடீஸ்வரன், செயலாளராக கவுண்டப்பன், பொருளாளராக மனோகரன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com