பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கலந்தாய்வு

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் முதல் கட்டமாக 150 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் முதல் கட்டமாக 150 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
 பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவுகள் மற்றும் சுயநிதிப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை துவங்கியது.
 மதிப்பெண்கள் அடிப்படையில் 230 மாணவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. கலந்தாய்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.  வெளிப்படையாக நடைபெற்ற கலந்தாய்வில் 150 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்லூரி பார்வையாளராக தேனி மாவட்டம் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி பங்கேற்றார்.  கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்செல்வி மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் (பொறுப்பு) கந்தசாமி ஆகியோர் வழங்கினர்.
 கல்லூரியில் கலந்தாய்வு முதல் நாளான திங்கள்கிழமை ஆடை வடிவமைப்புத்துறையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என ஏராளமான இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வருடனும், பழனிக்கோயில் இணை ஆணையருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலந்தாய்வில் ஆடை வடிவமைப்புத்துறையும் சேர்க்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com