2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

பழனி அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மூன்று பேரும் காப்பாற்றப்பட்டனர்.

பழனி அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மூன்று பேரும் காப்பாற்றப்பட்டனர்.
பழனி பத்ரா தெருவை சேர்ந்தவர் சித்ரா(32). இவரது மகன்கள் தன்னாசி(6), சோனைமுத்தையா(3). சித்ரா தனது அக்காள் வீட்டில் தங்கியுள்ளார். அக்காள் கணவர் சோனைமுத்து. இவர் காசநோய் பாதித்து வீட்டில் உள்ளார். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் அடிக்கடி சித்ராவை திட்டினாராம். இந்நிலையில் சித்ரா திங்கள்கிழமை தனது மகன்கள் இருவருக்கும் அரளிவிதையை அரைத்துக் கொடுத்து விட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் சித்ரா மற்றும் குழந்தைகளை பழனி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் மூன்று பேரும் காப்பாற்றப்பட்டனர். இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com