ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனங்களுக்கு சீல்

ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து மூடப்பட்டன.

ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து மூடப்பட்டன.
   ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி நிதி நிறுவனங்கள் இயங்கி வருவதாக, பழனி சார்-ஆட்சியருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை இரவு சார்-ஆட்சியர் வினீத், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் கே. மாரிமுத்து, காவல் ஆய்வாளர் கே. கோட்டைச்சாமி, துணை வட்டாட்சியர் முத்துச்சாமி ஆகியோர், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் உள்ள நிதி நிறுவன அலுவலகங்களில் ஆய்வு செய்தனர். அதில், அந்த நிறுவனங்கள் எந்தவித அரசு அனுமதியும் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. எனவே, அந்த நிறுவனங்களை பழனி சார்-ஆட்சியர் வினித் சீல் வைத்து மூடினார்.
   இதேபோன்று, ஒட்டன்சத்திரம் நகரில் பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் நிதி நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com