ஒட்டன்சத்திரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை துணை கோட்ட அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் கிளைத் தலைவர் க.திருமலைச்சாமி தலைமை வகித்தார். கிளைச் செயலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஒட்டன்சத்திரம் பிஎஸ்என்எல் துணைக் கோட்ட அதிகாரி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், அவரை உடனடியாக மாற்றக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.