ஒட்டன்சத்திரம் அருகே சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை, வட்டாட்சியர் தொடக்கி வைத்தார்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெருமாள்குளம் மற்றும் நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியார் அமைப்புகள் முன்வந்தன. அதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை அரசப்பபிள்ளைபட்டி அருகே உள்ள நங்காஞ்சி ஆறு மற்றும் விருப்பாட்சி அருகே உள்ள பெருமாள்குளத்தில் உள்ள சீமைக் கருவே மரங்களை அகற்றும் பணியை, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பொ. மாரிமுத்து தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியர் கே. முத்துச்சாமி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.