செந்துறை அருகே தீ விபத்தில் காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (26). கூலித் தொழிலாளி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் சமையல் செய்தபோது மண்ணெண்ணெய் பாட்டில் கீழே தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில், பாண்டி காயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். நத்தம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.