பழனியில் புதன்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
பழனி திருநகர் நான்காவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரன் மனைவி நாகு (72). இவர் புதன்கிழமை அதே பகுதியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு நடந்து வரும் போது அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த இருவர்அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து பழனி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.