திண்டுக்கல்
கல்லூரியில் மகா வளாகத் தூய்மைப்பணி
பழனி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் வியாழக்கிழமை மகா வளாகத்தூய்மைப்பணி நடைபெற்றது.
பழனி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் வியாழக்கிழமை மகா வளாகத்தூய்மைப்பணி நடைபெற்றது.
தூய்மை இந்தியா, தூய்மையே சேவை மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை முதல்வர் அன்புச்செல்வி தொடக்கி வைத்தார். மாணவர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள், அலுவலர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
13 குழுக்களாக பிரிந்து வளாகம் முழுக்க தூய்மைப்பணி நடைபெற்றது.
டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்கள் செய்திருந்தனர்.