கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் செல்லிடப்பேசி கடை வைத்திருப்பவர் அப்பாஸ். இவர் வழக்கம் போல் தனது கடையை திங்கள்கிழமை இரவு பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தனது கடையைத் திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் கொடைக்கானல் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
கடையிலிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் , லேப் டாப் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து அப்பாஸ் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.