கொடைக்கானலில் மழை

கொடைக் கானலில் செவ்வாய்க்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது.

கொடைக் கானலில் செவ்வாய்க்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது.
   கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. கடந்த சில தினங்களாக மழையில்லாமல் இருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதலே மேகமூட்டமும் சாரலும் நிலவியது.  பிற்பகல் மழை பெய்யத் தொடங்கியது.  இந்த மழையானது கொடைக்கானல், செண்பகனூர்,பிரகாசபுரம், பெருமாள்மலை, அப்சர்வேட்டரி, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் பெய்தது.
 கொடைக்கானலில் பெய்த மழையால் தீபாவளித் திருநாளை முன்னிட்டு கடைகளில் பட்டாசு, துணிக் கடைகள், இனிப்பு வியாபாரம் பாதிக்கப்பட்டது.  சிறுவர்களும்,பொது மக்களும் பட்டாசுகளை வாங்க முடியாமலும், வாங்கிய பட்டாசுகளை வெடிக்க முடியாமலும் சிரமப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com