தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு இலவச பயிற்சி

பழனியை அடுத்த ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் வரும் அக்.22-ஆம் தேதி முதல் தேசிய திறனறித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு துவங்கவுள்ளது.

பழனியை அடுத்த ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் வரும் அக்.22-ஆம் தேதி முதல் தேசிய திறனறித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு துவங்கவுள்ளது.
   தமிழக கல்வித்துறை 8 -ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்க்கு ஆண்டுதோறும் தேசிய திறனறித் தேர்வினை நடத்தி வருகிறது.  மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் தகுதியுடைய 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
இத்தேர்வில் வெற்றி பெறுவோர்க்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும்.  இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மூலமே விண்ணப்பிக்க இயலும்.  வரும் டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.  
இத்தேர்வுக்கு மாணவ,
மாணவியரை தயார் செய்யும் பொருட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) முதல் ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் திறனறித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்  துவங்கப்படவுள்ளதாக மைய இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com