பழனியை அடுத்த ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் வரும் அக்.22-ஆம் தேதி முதல் தேசிய திறனறித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு துவங்கவுள்ளது.
தமிழக கல்வித்துறை 8 -ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்க்கு ஆண்டுதோறும் தேசிய திறனறித் தேர்வினை நடத்தி வருகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் தகுதியுடைய 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
இத்தேர்வில் வெற்றி பெறுவோர்க்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மூலமே விண்ணப்பிக்க இயலும். வரும் டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு மாணவ,
மாணவியரை தயார் செய்யும் பொருட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) முதல் ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் திறனறித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளதாக மைய இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.