பழனி கோயில் உற்சவர் சிலை விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி திங்கள்கிழமை பழனி இந்து சமய மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மன்றத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். செயலர் உதயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் தாண்டேஸ்வரன், ஆலோசகர் பாலுச்சாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிலை தொடர்பான வழக்கை மீண்டும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழுவே விசாரிக்க வேண்டும். பஞ்சாமிர்தத்தை மலை வாழைப்பழத்தினால் மட்டுமே தயாரிக்க வேண்டும். கோயிலில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.