ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் கீழே விழுந்தவர்கள் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
பழனி பெரியபள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ஹக் (52). இவர், தனது மனைவி அபிநிஷா (38) மகன் ஹைதர் அலி (11) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தார்.
பழனி- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தன்னாசியப்பன் கோயில் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி மூவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த மினி லாரி அவர்கள் மீது மோதியதில் சிறுவன் ஹைதர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைத்த அப்துல்ஹக், அபிநிஷா ஆகியோர் பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.