கொடைக்கானலில் கஞ்சா விற்ற 5 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானல் அருகே சின்னப்பள்ளம் செல்லும் வழியில் கஞ்சா விற்கப்படுவதாக கொடைக்கானல் கிடைத்த தகவலையடுத்து போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அண்ணாராமசாமி நகரில் சந்தேகத்திற்கிடமான 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அதேப் பகுதியைச் சேர்ந்த காமாட்சி (42), பாஸ்கரன் (37), சிவபாலன் (38) மற்றும் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலப்பள்ளியைச் சேர்ந்த ஷரபுதீன் (42) ஆகிய 4 பேரிடம் 5 கிலோ 250 கிராம் கஞ்சா விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு துணையாக இருந்த கேரளா மாநிலம் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த சுரேஷ் (38) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.