திண்டுக்கல்லில் ஜூலை 19-இல் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

தடகளம், கால்பந்து, நீச்சல் மற்றும் கூடைப்பந்து ஆகிய பிரிவுகளில் திண்டுக்கல் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.

தடகளம், கால்பந்து, நீச்சல் மற்றும் கூடைப்பந்து ஆகிய பிரிவுகளில் திண்டுக்கல் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது: 
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 19ஆம் தேதி நடைபெறுகின்றன. மாவட்ட விளையாட்டரங்கில் தனி நபர்களுக்கான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளும், குழுப் போட்டிகள் பிரிவில் கூடைப்பந்து, கால்பந்து ஆட்டங்களும் நடைபெற உள்ளன.
 தனிநபர் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கும், குழு போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
 விருப்பமுள்ள மாணவர்கள், பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் போட்டியில் பங்கேற்கலாம்.  இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 0451-2461162 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com