கடன் தொல்லையால் நூல் வியாபாரி தற்கொலை

கடன் தொல்லை காரணமாக, கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில்  தூக்கிட்டு வியாபாரி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். 

கடன் தொல்லை காரணமாக, கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில்  தூக்கிட்டு வியாபாரி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். 
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிக்குமார் (32), நூல் வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவரது மனைவி கௌசல்யா. இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், மணிக்குமார் கடன் வாங்கி வியாபாரம் செய்துள்ளார். இருப்பினும், வியாபாரம் சரியாக நடக்காததால், மீண்டும் நஷ்டமடைந்துள்ளார்.
 இதைத் தொடர்ந்து, மணிக்குமார் தனது குடும்பத்தினருடன் பழனியிலுள்ள வேணுகோபால் நகரில் வசித்து வந்துள்ளார். இந் நிலையில், சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லையாம்.
இதனிடையே, கொடைக்கானல்-பழனி மலைச் சாலையான சவரிக்காடு அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து கௌசல்யா கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com