பழனி அருகே செவ்வாய்க்கிழமை சாலையோர கல்லில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். இருவர் பலத்த காயமடைந்தனர்.
பழனி 23ஆவது வார்டை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அஞ்சுமாவடியான் (20). இவரும் இவரது நண்பர்கள் சொக்கர், மாரிமுத்து ஆகியோரும் ஒரு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கொடைக்கானல் மலையடிவாரம் சென்றுள்ளனர். பின்னர் மாலையில் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மூவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். புளியமரத்துசெட் சாய்பாபா கோயில் அருகே வந்த போது சாலையோர கல்லில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஞ்சுமாவடியான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த மாரிமுத்து, சொக்கர் இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.