ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 10 நாள்கள் இப்பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் பி.மாரியம்மாள் தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எஸ்.சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆர்.சியாமளாநாதன் வரவேற்று பேசினார். ஆசிரியர் ராமலெட்சுமி நன்றி கூறினார்.