சிவகாசி பி.எஸ்.ஆர்.ரெங்கசாமி மகளிர் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து, ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.
இம்முகாமை தாளாளர்ஆர். சோலைச்சாமி தொடக்கிவைத்தார். கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை மருத்துவர் தேவி ராஜாத்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர், 88 மாணவிகளிடம் ரத்த தானம் பெற்றனர். இதற்கான ஏற்பாட்டினை, திட்ட அலுவலர் எம்.சிந்துஜாதேவி செய்திருந்தார்.