பாம்பன் குந்துகாலில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு

ராமநாபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் ரூ.60 கோடியில் புதியதாக ஆழ்கடல் மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான நில அளவைப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

ராமநாபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் ரூ.60 கோடியில் புதியதாக ஆழ்கடல் மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான நில அளவைப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து வாழ்வாதாரம், மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் பாம்பனில் புதிதாக ஆழ்கடல் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மீனவர்களின் இக்கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு மாநில அரசுகளின் மானியத்துடன் புதிய ஆழ்கடல் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழக மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி குந்துகாலில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் ராமேசுவரம் முதல் குந்துகால் கடற்கரை வரையில் கடல் மட்டத்தின் அளவுகள், துறைமுகம் அமையவுள்ள இடத்திற்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள வழித்தடங்கள் குறித்தும் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது துறைமுகம் அமையவுள்ள பகுதியில் வாழ்ந்து வரும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறும் அவர்களது வாழ்விடங்களில் துறைமுக கட்டுமானப் பணிகள் எதுவும் இடம்பெறாத வகையிலும் நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com