அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கோரி ராமேசுவரத்தில் தமிழக சிவசேனா அமைப்பு சார்பில் ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து சிலைகள், கட்டுமானப் பொருள்களை பிரதமருக்கு தபால் மூலம் புதன்கிழமை அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழக சிவசேனா சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டக்கோரி மாவட்டத் தலைவர் ஜி.சதீஸ்குமார் தலைமையில் ராமர், சீதா, லெட்சுமணன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து அத்துடன் கட்டுமானப் பொருள்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் மூலம் புதன்கிழமை அனுப்பி வைத்தனர்.
அப்போது மாவட்ட இணைஞரணி தலைவர் ஹரிதாஸ், மாவட்ட அமைப்பாளர் ஸ்டாலின், நகர் தலைவர் உதயா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.