கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பரமக்குடி சார்-ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட்டார, கிராம ஊராட்சிகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், வளர்ச்சிப் பாதைகளில் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து கண்காணிப்பதற்கு, ஊராட்சி ஒன்றிய வளர்ச்சித் துறை பணிகளுக்கான கமுதி மண்டல அலுவலராக பரமக்குடி சார்-ஆட்சியர் விஷ்ணுசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சார்-ஆட்சியர் விஷ்ணுசந்திரன் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம், அவரது தலைமையில் நடைபெற்றது. அதில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள், அரசு அதிகாரிகளிடையே கமுதி ஊராட்சி ஒன்றியத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தினார்.